Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லக்கு நாச்சியார் கோலத்தில் ... காஞ்சிபுரம் கோவில்களில் மண்டலாபிஷேகம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு காஞ்சிபுரம் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவுர்ணமிக்கு குவிந்த பக்தர்களால் திருச்செந்துாரில் தங்கத்தேர் ரத்து
எழுத்தின் அளவு:
பவுர்ணமிக்கு குவிந்த பக்தர்களால் திருச்செந்துாரில் தங்கத்தேர் ரத்து

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2024
11:06

துாத்துக்குடி; குபேர பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு முழுதும் குறிப்பிட்ட சில நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு மாலையில் நடப்பது வழக்கம். ஆனால், குபேர பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால், நேற்று மாலை முதலே பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு கடற்கரையில் இடம்பிடித்தனர்.

கூட்ட நெரிசல் காரணமாக, தங்கத்தேர் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டது. சுவாமி ஜெயந்திநாதர் – வள்ளி-, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளியதும் தீபாராதனை மட்டும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தங்கத்தேர் இழுப்பதற்காக நேற்று மட்டும், 19 பேர் கோவில் நிர்வாகத்திடம் பணம் செலுத்தி இருந்தனர். அந்த பக்தர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் அவர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கடந்த சில மாதங்களாகவே பவுர்ணமி தோறும் கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ஆயிரகணக்கான வாகனங்களில் வந்து நேற்று திருச்செந்துாரில் குவிந்தனர். கோவில் அருகே பெருந்திட்ட வளாகப் பணிகள் நடப்பதால் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் திணறி வருகின்றனர். ‘வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஊருக்கு வெளிப்பகுதியில் நிரந்தரமாக வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்’ என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar