பதிவு செய்த நாள்
22
ஜூன்
2024
02:06
துாத்துக்குடி; துாத்துக்குடி சிவன் கோயிலில், பவுர்ணமிபூஜையை ஒட்டி, நேற்று பாகம்பிரியாள் அம்பாள், புஷ்ப பாவாடை அலல்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். துாத்துக்குடியில், பிரசித்த பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில், பவுர்ணமி பூஜை விழா நடந்தது. இதனை ஒட்டி, 108 மாவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை ஒட்டி, பாகம்பிரியாள் அம்பாள் புஷ்ப பாவாடை அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று ஒரே நேரத்தில் பவுர்ணமி பூஜை, மாவிளக்கு பூஜை, யோகா, சொற்பொழிவு என நடந்ததால், பக்தர்கள் கூட்டத்தால் கோவில் நிரம்பி வழிந்தது.