பதிவு செய்த நாள்
22
ஜூன்
2024
03:06
திருநெல்வேலி; நெல்லை காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்ட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு ரதவீதிகள், வீடுகள், திருமண மண்டபம் என பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டாலும், நெல்லை டவுன்பாரதியார் தெரு லிட்டில்பிளவர் மேல்நிலைப்பள்ளியில் மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கைங்கர்ய டிரஸ்ட் மற்றும் பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம், தருமபுரம் தம்பிரான் சுவாமிகள், ராமகிருஷ்ண தபோவனம் குற்றாலம் அகிலானந்தசுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர். காலை 6.15 மணிக்கு துவங்கிய அன்னதான நிகழ்ச்சி இரவு 6.30 மணி வரைநீடித்தது. அன்னதான நிகழ்ச்சியில் 68 ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை இடத்தை தொடர்ச்சியாக வழங்கிவருவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 1100 தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றினர். காலையில் பொங்கல், சட்னி, சம்பார், கேசரி ஆகியவையும், தொடர்ந்து சாதம், சம்பார், அவியல், கூட்டு, ரசம், பச்சடி, உருளைக்கிழங்கு குருமா, சர்க்கரைபொங்கல், மோர் உள்ளிட்ட உணவு மொத்தம் என ௬௮ ஆயிரம்பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, டி.டி.கே.சிதம்பரம், காசிவிஸ்வநாதன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் குணசீலன், குணத்துரை, ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், பரமசிவன், சுப்பிரமணியன், ராஜகோபால், பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சீனிவாசன், கமலேஸ்வரன்உட்படபலர் கலந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.