மத நல்லிணக்கத்திற்காக 22 ஆண்டுகளுக்குப் பின் கந்தூரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2024 04:06
காரியாபட்டி; மத நல்லிணக்கத்திற்காக நடத்தப்படும் கந்தூரி திருவிழா, 22 ஆண்டுகளுக்குப் பின் நாளை நடைபெறுவது அனைத்து சமுதாய மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
காரியாபட்டி பாம்பாட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட வசிக்காத நிலையில் 300 ஆண்டுகளுக்கு முன் அங்கு தர்கா ஏற்படுத்தப்படுத்தப்பட்டது. அக்கிராமத்தினர் பாதுகாத்து, பராமரித்து வருகின்றனர். சத்திரம் புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை முடிந்து கடைசி நாளில் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து சமூக நல்லிணத்திற்காக பாம்பாட்டி தர்காவில் கந்தூரி திருவிழா கொண்டாடினர். மாட்டு வண்டியில் வருவர். சூழ்நிலை காரணமாக கந்துாரி திருவிழாவை தொடர முடியவில்லை. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பின் சத்திரம் புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கந்தூரி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர். நாளை நடைபெறும் திருவிழாவுக்கு இன்று பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்தனர். மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில் மத நல்லிணக்கத்திற்காக ஒன்று கூடி நடத்தப்படும் கந்தூரி திருவிழாவில் இந்துக்களும் கலந்து கொள்வர். கருப்பசாமி கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் குடும்பங்களாக தங்கி வருகின்றனர். இந்நிகழ்வு அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.