பதிவு செய்த நாள்
24
ஜூன்
2024
02:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜாரிகளுக்கு கோயில் வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நேற்று நடந்த துவக்க விழாவிற்கு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமை வகித்தார். புரோகிதர்கள், கோயில் குருக்கள் மூலம் காயத்ரி மந்திரம், தியான ஸ்லோகம், அர்ச்சனை மந்திரம், அபிஷேக முறைகள், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம், அபிராமி அந்தாதி ஆகியவை தமிழ் வேதங்களில் பூஜாரிகளுக்கு ஜூலை 7 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பஜ்ரங்கதாஸ் பாபா அறக்கட்டளை இயக்குனர் சீதாராம்தாஸ் பாபா, சுவாமி பிரணவநந்தா, கோவை தேவேந்திர சுவாமிகள், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமை ப்பாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு வி.எச்.பி., மாநில இணை பொதுச்செயலாளர் ராமசுப்பு, தென் மண்டல அமை ப்பாளர் சரவணன், பூஜாரிகள் பலர்
பங்கேற்றனர். நிறைவு விழாவில் பூஜாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.