கோவை; கோவை - பொள்ளாச்சி ரோட்டில் ரத்தனம் கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆதி சிவனுக்கும் - பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு வஸ்திரத்தில் சிவ பார்வதி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.