அமர்நாத் யாத்திரை; பனிலிங்க தரிசனம்.. முதல் குழு புறப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2024 03:06
ஜம்மு: அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை இன்று (ஜூன்28) துவங்கியது. காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து 2 குழுக்கள் சென்றன முதல்கட்டமாக பகவதிநகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து பக்தர்கள் குழு புறப்பட்டு சென்றது. கவர்னர் மனோஜ் சின்கா கொடி அசைத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் ஹர, ஹர மஹாதேவா என்ற கோஷங்கள் எழுப்பினர். யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.