தாய் மற்றும் குழந்தை வடிவில் காட்சியளித்த பெரியகுளம் கவுமாரியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2024 04:06
பெரியகுளம் ; சுயம்புவாகத் தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். திருப்புகழில் குழந்தை மாநகர் என குறிப்பிடப்பட்டுள்ள பெரியகுளம் நகரில் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமாக கவுமாரியம்மன் திகழ்கிறாள். இங்கு இன்று ஆனி 2 ம் வாரம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கவுமாரியம்மன் தாயாகவும், குழந்தை வடிவிலும் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.