கோம்பைப்பட்டி காளியம்மன் கோயிலில் பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2024 08:06
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் சாமி சிலை செய்ய பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கிராம மக்கள் மஞ்சள் ஆடை அணிந்து பக்தி பரவசத்துடன் பிடி மண் எடுத்து வந்து காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை.12 சுவாமி நகைப்பெட்டி அழைத்து வந்து அம்மன் கரகம் ஜோடிக்கு கோவில் வந்தடைதல், ஜூலை.13 மாவிளக்கு,முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்துவர். மறுநாள் மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோம்பைபட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.