நத்தம், நத்தம் காமராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது.
நத்தம் காமராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஜூன்.18 துவங்கியது. அழகர் கோவில் தீர்த்தம் எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். நேற்று காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் அம்மன் குளம் சென்று சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் பால்குடம் எடுத்து மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து பின்னர் பஜார் தெரு வழியாக காமராஜ் நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் வந்து கம்பத்தில் பால் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க பால்குடம் எடுத்து வந்தனர்.