குமரகுருபரன் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்ப பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2024 09:06
நாகர்கோவில்; செண்பகராமன் புதூர் அருகில் அவ்வையார் அம்மன் கோவில் பின்புறம் குமரகுருபரன் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில் வாராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதம் இருமுறை வரும் பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் பஞ்சமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலையில் வாராகி உற்சவமூர்த்திக்கு, அம்மனுக்கும் பக்தர்களால் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பாலபிஷேகம் மற்றும் கயல்நீராபிஷேகம் மற்றும் பல பொருள்களைக் கொண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் நெய் விளக்கேற்றி வாராகி அம்மனை வழிபட்டனர். இரவு 8:30 மணி அளவில் அலங்கார தீபாராதனை, அன்னதானம், 11 ம ணிக்கு தேய்பிறை பஞ்சமி எட்டி வாராகி அம்மனுக்கு ஹோமம், நள்ளிரவு 12 ம ணிக்கு சிறப்பு தீபாரனை ஆகியவை நடைபெற்றது.