பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
09:06
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே மு.தூரி கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருளப்பசுவாமி, அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு விழா நடந்தது.
மு.தூரி கிராமத்தில் நல்லமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருளப்பசுவாமி, அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு, பொங்கல் விழா நடந்தது.முதுகுளத்தூரில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் அய்யனாருக்கு சிறப்புபூஜை நடந்தது. முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட கருப்பணசாமி, பைரவர்,குதிரைகள்,தவளும் பிள்ளை பக்தர்கள் தலையில் சுமந்து 4 கி.மீ., ஊர்வலமாக தூரி கிராமத்திற்கு கொண்டு சென்றனர். கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து சிறப்பு பூஜை மற்றும் கண் திறப்பு செய்யப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதியில் தூக்கி சென்று இருளப்பசுவாமி, அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.