பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
03:07
கேதார்நாத், கேதார்நாத் கோவில் அருகே உள்ள மலைப்பகு தியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவில், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு, சார்தாம் என்ற ழைக்கப்படும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமு னோத்ரிக்கான புனித யாத் திரை கடந்த மே 10ம் தேதி துவங்கியது. இதுவரை கேதார் நாத் கோவிலில் மட் டும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் மேற்கொண்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலை யில், புகழ்பெற்ற கேதார் நாத் கோவிலுக்கு பின்பு றம் உள்ள காந்தி சரோவர் மலைப்பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்டது. பனிச்சரிவு இதில், எவ்வித உயிர்ச் சேதமோ, பொருட்சே தமோ ஏற்படவில்லை என மாநில அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இது போன்ற நிகழ்வுகள் இமயமலை பகுதிகளில் அவ்வப்போது நிகழ்ந்து வருவதாகவும், இந்நிகழ்வுகளின் போது யாத்ரீகர்கள், மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.