பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
05:07
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவின், 38 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் இன்று துவங்கியது.
கேரளாவில், ஆண்டுதோறும் ஜூலையில், "ஜீவதானம் எனும் பெயரில், குருவாயூர் கோவில், 38 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. புன்னத்தூர் கோட்டை பகவதி கோவில் வளாகத்தில் இன்று தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் விஜயன், நடப்பாண்டுக்கான முகாமை துவக்கி வைத்தார். யானைகளுக்கு மூலிகை உணவு வழங்கினார். "ஜீவதானம் சிறப்பு குழு உறுப்பினர்கள், தேவஸ்தான நிர்வாகம் உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான கால்நடை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஒரு மாதம் நடக்கும் முகாமில், அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சவனப்பிராசம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தேவஸ்தானம், 11 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.