Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்தபத்மநாபாவுக்கு பிடித்த ... திருமலை முதல் காட் ரோட்டில் தீ பிடித்தது.. விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த ஊழியர்கள் திருமலை முதல் காட் ரோட்டில் தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு வேலை கிடைக்க வேண்டுமா? தொம்லுார் சூரிய நாராயணா கோவில் வாங்க..!
எழுத்தின் அளவு:
அரசு வேலை கிடைக்க வேண்டுமா? தொம்லுார் சூரிய நாராயணா கோவில் வாங்க..!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
01:07

பொதுவாக மனிதர்கள் தங்களின் வாழ்வில் கடைசி வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க, ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பர். அதிலும் குறிப்பாக அரசு பணி கிடைக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் விரும்புவர். இதற்காக கோவில் கோவிலாக சென்று, கடவுளிடம் மனம் உருகி வேண்டுவர். பெங்களூரில் ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்தால், அரசு வேலை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அந்த கோவிலை பற்றி பார்க்கலாம். பெங்களூரு தொம்லுார் அமரஜோதி லே- – அவுட்டில் உள்ளது சூரிய நாராயணா கோவில். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து, இந்த கோவிலில் வழிபட்டால், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.


அரசு வேலை மட்டும் இன்றி, அரசிடம் இருந்து சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும் இக்கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலின், ஐந்து அடுக்கு ராஜகோபுரம் கோவிலுக்கு அழகு சேர்க்கிறது. குதிரைகள் பூட்டிய தாமரை தேரில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி கருவறையில் பக்தர்களுக்கு, சூரிய நாராயணா அருள்பாலிக்கிறார். சப்தமி அன்று செந்தாமரை மலரால், சூரிய நாராயணாவுக்கு அர்ச்சனை நடக்கிறது. ஞாயிறுதோறும் காலையில் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. கோவிலுக்குள் பஞ்சமுக விநாயகர், கோதண்டராமர், பிரம்மா, சரஸ்வதி, நரசிம்மர், லட்சுமி, வைஷ்ணவி சன்னிதிகள் உள்ளன. ராமாயணம், மகாபாரத காலத்து ஓவியங்களும், தசாவதாரம், அஷ்டலட்சுமி, மீனாட்சி திருக்கல்யாண சிற்பங்களும், கோவில் பிரகாரத்தில் உள்ளன. இந்த கோவிலின் நடை தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, தொம்லுாருக்கு பி.எம்.டி.சி., பஸ் சேவை உள்ளது. – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar