Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்கல்ய பாக்கியம் தரும் ஆதிசக்தி ... திருக்கோஷ்டியூரில் பழமையான நந்தி சிலையை பாதுகாக்க கோரிக்கை திருக்கோஷ்டியூரில் பழமையான நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழக்கை தீர்த்து வைக்கும் தீர்த்த கணபதி
எழுத்தின் அளவு:
வழக்கை தீர்த்து வைக்கும் தீர்த்த கணபதி

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2024
03:07

கோகர்ணாவில் உள்ள தீர்த்த கணபதியின் மகிமையை பற்றி தெரிந்தவர்கள், அவரை தரிசிக்காமல் இருக்க மாட்டார்கள். தொலைவில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர்.


உத்தரகன்னடாவின், கோகர்ணாவில் கோடி தீர்த்தத்தின் வடக்கு திசையில் தீர்த்த கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சிறப்பானது. இந்தியாவில் கதம்பர்கள் ஆட்சியில், இரண்டாவது நுாற்றாண்டில் கோகர்ணாவில் கணபதி ஆராதனை அதிகமாக இருந்தது. இங்கு கணபதி கோவில்கள் ஏராளம். இவற்றில் மிகவும் சிறப்பானது தீர்த்த கணபதி கோவில். இது பல நுாற்றாண்டுகளை கடந்துள்ளது.


இதற்கு முன், கோவிலுக்கு மேற்கூரை இருக்கவில்லை. வைஷ்ணவர்கள் நீரில் மூழ்கி, மந்திரங்கள் ஓதி கணபதியை பூஜித்தனர். கோடி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்த கணபதிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்கள் நீங்கும், வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம். கோகர்ணாவில் உள்ள கணபதி கோவில்களில் உள்ள விக்ரகங்கள், ஒரே விதமாக செதுக்கப்பட்டவை. தொல்பொருள் துறை தகவலின்படி, தீர்த்த கணபதி கோவிலில் உள்ள விக்ரகம், மிகவும் சிறியதாகும். இங்கு குடி கொண்டுள்ள கணபதியின் சக்தியை பற்றி உணர்ந்தவர்கள், மிகவும் குறைவு. கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்து பலன் அடைந்தவர்கள் மூலமாக கேள்விப்பட்டு, பக்தர்கள் வருகின்றனர். பெங்களூரு, கேரளா, ஹைதராபாத், தமிழகம் என, பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேண்டுதல் வைத்து பூஜிக்கின்றனர். தீர்த்த கணபதி, நீதிமன்ற வழக்குகளை தீர்த்து வைப்பதில் பிரசித்தி பெற்றவர். எனவே ஆண்டுக்கணக்கில், நீதிமன்றத்துக்கு அலைபாயும் பலரும், தீர்த்த கணபதியை தரிசித்து பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர். கோகர்ணாவுக்கு, அனைத்து இடங்களில் இருந்தும் பஸ், ரயில் வசதி உள்ளது. சொந்த வாகனங்களிலும் செல்லலாம். – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar