Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ... காரமடை அருகே ராமானுஜர் சன்னதியில் திருவாதிரை வைபவம் காரமடை அருகே ராமானுஜர் சன்னதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 21 டன் அரிசியில் அன்ன பூஜை
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 21 டன் அரிசியில் அன்ன பூஜை

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
03:07

கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம்தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121வது மகா சமாதி அடைந்த தினம் கடைபிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் காலை அன்ன பூஜை நடந்தது. 


21 டன் அரிசி; கன்னியாகுமரி நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்ட தொண் டர்களால் நன்கொடை யாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்ன பூரணி சிலையை மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது. சுவாமி விவேகா னந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ரானடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி துவங்கியது.


பொதுமக்களுக்கு அரிசி வழங்கல்; நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்தா கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியா குமரி கேந்திர துணை தலைவிநிவேதிதாகுத்து விளக்கு ஏற்றி அன்ன பூஜையை துவங்கி வைத்தார். கிராம முன் னேற்ற திட்ட செயலா ளர் அய்யப்பன் வர வேற்றார். நாகஜோதி ஐக்கிய மந்திரம் பாடினார். சாந்தி அன்ன பூர்ணா ஸ்தோத்திரம் பாடினார். நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபூஜைக்கு வைக்கப்பட் டிருந்த அன்ன பூஜை அரிசியினை பொதுமக்களுக்கு வழங் வழங்கினார். கன்னியாகுமரி, தூத் துக்குடி, தென்காசி பகு தியை சார்ந்த ஏழை, எளிய மாணவ, மாண விகளுக்கு கல்வி உதவி தொகையினையும் வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர துணைத் தலைவர் அனுமந்த ராவ், மூத்த ஆயுட் கால ஊழியர் கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இன்று இங்கு நடைபெறுவது போன்று கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை 18 இடங்களில் இது போன்று அன்ன பூஜை நிகழ்ச்சியானது நடை பெறுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar