பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
03:07
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தர் 1902ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம்தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121வது மகா சமாதி அடைந்த தினம் கடைபிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் காலை அன்ன பூஜை நடந்தது.
21 டன் அரிசி; கன்னியாகுமரி நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்ட தொண் டர்களால் நன்கொடை யாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்ன பூரணி சிலையை மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது. சுவாமி விவேகா னந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ரானடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி துவங்கியது.
பொதுமக்களுக்கு அரிசி வழங்கல்; நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்தா கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியா குமரி கேந்திர துணை தலைவிநிவேதிதாகுத்து விளக்கு ஏற்றி அன்ன பூஜையை துவங்கி வைத்தார். கிராம முன் னேற்ற திட்ட செயலா ளர் அய்யப்பன் வர வேற்றார். நாகஜோதி ஐக்கிய மந்திரம் பாடினார். சாந்தி அன்ன பூர்ணா ஸ்தோத்திரம் பாடினார். நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபூஜைக்கு வைக்கப்பட் டிருந்த அன்ன பூஜை அரிசியினை பொதுமக்களுக்கு வழங் வழங்கினார். கன்னியாகுமரி, தூத் துக்குடி, தென்காசி பகு தியை சார்ந்த ஏழை, எளிய மாணவ, மாண விகளுக்கு கல்வி உதவி தொகையினையும் வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர துணைத் தலைவர் அனுமந்த ராவ், மூத்த ஆயுட் கால ஊழியர் கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இன்று இங்கு நடைபெறுவது போன்று கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை 18 இடங்களில் இது போன்று அன்ன பூஜை நிகழ்ச்சியானது நடை பெறுகிறது.