பதிவு செய்த நாள்
05
ஜூலை
2024
04:07
லக்னோ: ராமர் கோவிலில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. முதல் மாற்றம் வரும் நாட்களில் கொண்டு வரப்பட உள்ளது. அயோத்தியில் உள்ள கருவறையில் ராமருக்கு சேவை செய்யும் அர்ச்சகர்கள் உடை பாரம்பரிய மஞ்சள் (பீதாம்பரி) ஆடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது அர்ச்சகர்களுக்கான புதிய ஆடைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ச்சகர்கள் இதுவரை அணிந்து வந்த காவி உடை மாற்றப்பட்டு மஞ்சள் நிற உடை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சனாதன தர்மத்தின் கொள்கைகளின்படி ராமர் கோயிலில் உதவி அர்ச்கர்கள் அனைவரும், தலை முதல் கணுக்கால் வரை ஆடை அணிந்திருக்க வேண்டும். இதுவரை சில உதவி அர்ச்சகர்கள் மட்டுமே மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். இனி அனைத்து அர்ச்சகர்கள் குழுவும், பீதாம்பரி நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி கோயிலுக்குள் அர்ச்சகர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கோவிலின் சமீபத்திய படங்கள் சமூக ஊடகங்களில் கசிந்ததையடுத்து, அச்சுறுத்தல் காரணமாக, அர்ச்சகர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.