ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி அமாவாசை வழிபாடுகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், விபூதி, நெய், புனிதநீர், மஞ்சள், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.