வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2024 05:07
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா பக்தர்கள் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இன்று காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தை தொடங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாளை மாலை மகா வாராஹி ஹோமம், மறுநாள் லகு வாராஹி ஹோமம், தொடர்ந்து அஸ்வாரூடா வாராஹி ஹோமம், சிம்மாருட வாராஹி ஹோமம், ஜூலை.10 பஞ்சமி திதி அன்று ஊஞ்சல் உற்சவம் விளக்கு பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.