Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ... அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் விழா அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
05:07

தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோவில்களுள் ஒன்றாகவும், உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோவில். இக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதையடுத்து 22வது ஆண்டாக வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா இன்று(05ம் தேதி) துவங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.  


அதன்படி இன்று(05ம் தேதி) மாலை 6:00 மணிக்கு வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை (6-ம் தேதி) மஞ்சள் அலங்காரம், 7-ம் தேதி குங்குமம் அலங்காரம், 8-ம் தேதி சந்தன அலங்காரம், 9-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரம், 10-ம் தேதி மாதுளை அலங்காரம், 11-ம் தேதி நவதானிய அலங்காரம், 12-ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 13-ம் தேதி கனிவகை அலங்காரம், 14-ம் தேதி காய்கறி அலங்காரம், 15-ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறவுள்ளது. ஆஷாட நவராத்திரி விழாவின் போது மாலை நேரத்தில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இறுதிநாளான 15-ம்தேதி வராஹி அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. அப்போது நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட வாணவேடிக்கையுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை  தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா தலைமையில் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒடிசா:  பிரசித்திப் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் நான்காவது திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிலையை வரலாற்று ஆய்வாளர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar