பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
10:07
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா நாளை (11ம் தேதி) நடப்பதையொட்டி, தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசன விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தெருவடைச்சான் வீதியுலா நடந்தது. இன்று தங்கத்தேரில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான தேர் திருவிழா நளை (11ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, நேற்று தேர் கட்டும் பணிகள் துவங்கியது. தேரோட்டத்தின் போது, மூலவர்களான நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 5 தேர்களில் வலம் வருகின்றனர். அதனையொட்டி நேற்று 5 தேர்களும், கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தேர் உறுதி தண்மை குறித்து, இன்று பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தேரோட்டத்திற்கு மறுநாள் (12ம் தேதி) ஆனி திருமஞ்சன தரிசன விழா நடக்கிறது. ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.