கோவை நரசிங்க பெருமாள் கோவிலில் 72 மணி நேர இடைவிடாத சப்தாகமம்; ஹரிபஜனை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2024 01:07
கோவை; ராமநாதபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோவிலில் 72 மணி நேர இடைவிடாத சப்தாகமம் எனும் ஹரிபஜனை நிகழ்ச்சி நடந்தது.
கோவை, ராமநாதபுரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் திருக்கோவிலில் ஆஷாட சுத்த ஏகாதசி 43-ஆம் ஆண்டு மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று முதல் ஜூலை 16, 17, 18 (ஆனி 32, ஆடி 1,2) செவ்வாய், புதன், வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் 72 மணி நேர இடைவிடாத சப்தாகமம் எனும் ஹரிபஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.