அரியாங்குப்பம்; கடலுார் சாலை நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து, கடந்த 15ம் தேதி பால்குடம் நிகழ்ச்சியும், நேற்று காலை இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று18ம் தேதி முருகன் – வள்ளி தெய்வானை சாமி வீதியுலா காட்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான நாளை 19ம் தேதி மாலை செடல் திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.