Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி புதன்; லட்சுமி நாராயண ... ராமேஸ்வரம் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த கொல்கத்தா பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு பாதயாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசைக்கு சதுரகிரியில் போதிய குடிநீர், மருத்துவ வசதிகள் தேவை ; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசைக்கு சதுரகிரியில் போதிய குடிநீர், மருத்துவ வசதிகள் தேவை ; பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2024
11:07

வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு போதிய அளவிற்கு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்புடன் நடப்பது வழக்கம்‌. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த ஆண்டும் ஆகஸ்ட்.1ல் பிரதோஷ வழிபாடு, ஆகஸ்ட் 2ல் சிவராத்திரி சிறப்பு பூஜை, ஆகஸ்ட் 4ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. வழக்கம்போல் பல ஆயிரம் பக்தர்கள் வருவதை எதிர்பார்த்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக போதிய மழை இல்லாததால் சதுரகிரியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து மிகவும் குறைந்த அளவே உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 500 மீட்டர் தூர இடைவெளியில் ஒரு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட வேண்டும். இதேபோல் மலையேறும் பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவ குழுவினர், அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 5 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படுவதை விருதுநகர், மதுரை மாவட்ட அரசு நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் . மேலும் போதிய பஸ் வசதிகள், 24 மணி நேரமும் தண்ணீருடன் கூடிய சுகாதார வளாக வசதிகள் செய்து தர வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar