விருத்தாசலம்; விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலில், நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில், 42வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 21ம் தேதி துவங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக, திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஏராளமான சபெண்கள் கலந்துகொண்டு, அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. வரும் 4ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.