காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான வள்ளி தேவயானை சமேத ஸ்ரீ செங்கல்வராய ஸ்வாமி பிரம்மோற்சவ விழாவை யொட்டி மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பல்வேறு நறுமணப் பூக்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தீப தூபங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி அம்மையார்களை கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று அன்னம் வாகனத்தில் ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நகரில் நான்கு மாட வீதிகள் எங்கும் அரோகரா பக்தி முழக்கங்கள் ஒலித்தது. மேள தாளங்கள் மங்கள வாத்தியங்களுடன் சாமி ஊர்வல நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகள் என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, மல்லிகார்ஜுன் பிரசாத், லோகேஷ் ரெட்டி, நாகபூஷணம் யாதவ், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.