விருத்தாசலம் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 04:07
விருத்தாசலம்; ஆடி கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி, கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் சுவாமி, மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவில்களில் சிறப்பு பாலபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர். விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.