பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
04:07
மானாமதுரை; திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோயில் 105வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 21 ஆம் தேதி துவங்கியது இதை எடுத்து மலையில் இருந்து கிளம்பிய சுவாமிகள் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை ஆகிய ஊர்களின் வழியே 24 நாள்கள் வலம் வந்து பின்னர் திருக்கூடல் மலைக்கு சென்றடைவார்.வழியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளும் நவநீத பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற உள்ளன.நேற்று வாக்குடி சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், மாயாண்டி சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெள்ளிக்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம்,வாக்குடி ஊராட்சி தலைவர் மாயாண்டி,வெள்ளிக்குறிச்சி ஊராட்சி தலைவர் நாகர்ஜூன் மற்றும் செல்லப்பாண்டி,நீலமேகம்,குன்றாமணி மற்றும் வாகுடி,வெள்ளிக்குறிச்சி கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.