ஆடி கிருத்திகை; சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2024 11:07
புதுச்சேரி; சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. சாரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நேற்று நடந்தது. காலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து, சுவாமி வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் கோவில் குருக்கள், உபயதாரர் செய்திருந்தனர்.