Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... ஆடி கிருத்திகை விழா; பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் ஆடி கிருத்திகை விழா; பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னை முருகப்பெருமான் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2024
01:07

சென்னை; முருகப்பெருமானுக்கான பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை விழா சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர்சேகர்பாபு குடும்பத்துடன்முருகப் பெருமானை தரிசித்தார்.


வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை சிறப்பு பூஜைகள்மற்றும் பல்வேறு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு வள்ளி, தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மயில் வாகத்தின் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.


வல்லக்கோட்டை; ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜை, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. ரத்தினங்கி சேவை அலங்காரத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


குமரகோட்டம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கும், உற்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கந்தபுராணம் அரங்கேற்றம் நடந்த மண்டபத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமானுக்கு, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.


திருப்போரூர்; திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன. அதேபோல, கடம்பத்துார் கடம்பவன முருகன் கோவில், பிராட்வே கந்தக் கோட்டம், வானகரம், மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவில், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன், குரோம்பேட்டை குமரன்குன்று, குன்றத்துார் முருகன் ஆகிய கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar