Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பூரம் ; தஞ்சை பெரியகோவிலில் ... 1000 கண் அலங்காரத்தில் அருள்பாலித்த நித்திய சுமங்கலி மாரியம்மன் 1000 கண் அலங்காரத்தில் அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா; ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா; ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
03:08

காரமடை;  வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில் பெண்மைக்கு பெயர் சேர்க்கும் விதமாக ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தார். இவரது ஜென்ம நட்சத்திரமான ஆடி மாத பூரம் வைணவ திருத்தலங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரம் தினத்தில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலசந்தி பூஜை முடிந்து ஆண்டாள் சன்னதியில் விஸ்வக்க்ஷேனர் ஆவாகனம் புண்யாஜனம், கலச ஆவாஹனம், மூலவர் மற்றும் உற்சவர் ஆண்டாள் தாயாருக்கு நெய் நெய் தேன் பால் தயிர் இளநீர் கனி வர்க்கம் மஞ்சள் சந்தனம் வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளால் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. பட்டுடுத்தி வெள்ளி சிம்மாசனத்தில் வெண்பட்டு குடை சூழ மேலதாளம் முழங்க ரங்க மண்டபத்தை அடைந்தார் உற்சவர் ஆண்டாள் தாயார். ஸ்ரீ ரங்கநாதரிடம் இருந்து மாலை பரிவட்டம் சடாரி மரியாதை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்தலத்தார்கள் வியாத வியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் பெருமாள் முன் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில் இருந்து நாச்சியார் திருமொழி பாசுரங்கள் சேவித்தனர். மீண்டும் சடாரி மரியாதை உற்சவர் ஆண்டாள் தாயாருக்கு சாத்தப்பட்டு தாயாரிடம் இருந்து சூடிக்கொடுத்த மாலை ரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோவில் வலம் வந்து ஆண்டாள் சன்னதியை அடைந்தார். தொடர்ந்து உச்சக்கால பூஜை சாற்றுமறை பிரசாத விநியோகங்கள் செய்யப்பட்டு வைபவம் நிறைவடைந்தது. இதில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அதிகாரிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar