பதிவு செய்த நாள்
08
ஆக
2024
11:08
பாவூர்சத்திரம்; கீழப்பாவூர் ருக்மணி, ஸத்யபாமா ஸமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ வைபவ புஷ்பயாகம் நடந்தது. சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த ஸ்வாமிகள், விதுசேகரபாரதி ஸ்வாமிகள், பரனூர் மகாத்மா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அனுக்ரஹத்துடன் கடந்த 2ம்தேதி மாலை 6.30 மணிக்கு புண்யாகவாசனம், பகவத் பிரார்த்தனை, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், கோஷ்டி பிரசாதம் நடந்தது. 3ம்தேதி காலை 7 மணிக்கு புண்யாக வாசனம், விசேஷ திருமஞ்சனம், பவித்ராலை பிரதிஷ்டை, வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம், பிரசாதம் வழங்கல், மாலை 6 மணிக்கு சயனசேவை, விசேஷ ஹோமம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், பிரசாதம் வழங்குதல், 4ம் தேதி காலை 6 மணிக்கு புண்யாகவாசனம், விசேஷ திருமஞ்சனம், பவித்ரோத்ஸவ ஹோமம், பூர்ணாகுதி, பெருமாள் விஷ்வக்சேனர் மற்றும் கருடாழ்வார் பவித்ரமாலை சமர்ப்பணம், விசேஷ திருவாராதனம், பிரசாதம் வழங்குதல், மாலை ௬மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா, தீபாராதனை நடந்தது. ௫ம்தேதி காலை ௮ மணிக்கு கும்ப ஜெபம், அஷ்ட திரவிய அபிஷேகம், தீபாராதனை, மாலை ௫ மணிக்கு புஷ்பயாகம், தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.