51 சக்தி பீடங்களில் ஒன்றான வங்கதேச தாகேஸ்வரி கோவிலில் சங்கராச்சார்யர் கேட்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2024 04:08
தாக்கேஸ்வரி துர்கை கோயில் வங்காள தேசத்தின் தேசிய கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் துர்கா பூஜை புகழ் பெற்றது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக தாக்கேஸ்வரி கோயில் கருதப்படுகிறது. காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 2000ம் ஆண்டு ஜுன் மாதம், வங்கதேச தலைநகர் டாக்கா சென்று சக்திபீடங்களில் ஒன்றான தாகேஸ்வரி கோவிலுக்குச் சென்று வழிபட்டு, அங்கு தங்கி சண்டி ஹோமம் செய்தார். சுவாமிகளுக்கு டாக்கா நகரில் மூன்று நாட்கள் தங்க வசதிகளும், போலீஸ் பாதுகாப்பும் வங்க தேச அரசு அளித்தது. சுவாமிகளின் வருகையைக் கொண்டாடும் பொருட்டு தாகேஸ்வரி கோவிலின் நுழைவில் சங்கராச்சார்யர் கேட் என்று தோரணவாயில் அமைக்கப்பட்டது. வங்க தேசத்திற்கு விஜயம் செய்த முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமையினை பூஜ்ய ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெற்றார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மத்திய அரசின் சார்பில் அப்போது அமைச்சர்களாக இருந்த ப்ரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்ஹா செய்திருந்தனர். தற்போது இங்கு மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து வங்கதேச பார்லிமென்டை கலைக்கப் பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் இன்று( ஆக.,8) இடைக்கால அரசு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.