ஆடித் திருவிழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2024 06:08
ராமேஸ்வரம்; ஆடித் திருக்கல்யாணம் விழா யொட்டி ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாணம் விழா துவங்கியது. இன்று 11ம் திருவிழா யொட்டி கோயிலில் இருந்து காலை 6:30 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மனும், காலை 11:30 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் வாகனத்தில் ராமநாதசுவாமி, பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார். மாலை 3:20 மணிக்கு தபசு மண்டகப்படி முன்பு சுவாமி, அம்மனுக்கு மாலைமாற்று நிகழ்ச்சி கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (ஆக., 9) இரவு 8 மணிக்குள் ராமேஸ்வரம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.