திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர விமானத்தில் வீதியுலா வந்த அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 10:08
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பிராணாம்பிகை அம்மன் இந்திர விமானத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மூலவர் ஸ்ரீபிராணாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்கள் மற்றும் வளையல்கள் அணிவித்து மகாதீபாராதனை நடந்தது.தொடர்ந்து மின் அலங்காரத்தில் ஸ்ரீபிராணாம்பிகை இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.