நடுவனுார் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 10:08
நத்தம்; நத்தம் அருகே நடுவனுார் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி ஜூலை 30 ல் அழகர்கோவில் , கங்கை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஆக.6ல் கரகம் ஊர்வலமாக அழைத்து வர அம்மனுக்கு சிறப்பு பூஜை , அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் , பால்குடம், மாவிளக்கு, ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் தீ வட்டி பரிவாரங்களுடன் அம்மன் இருப்பிடம் போய் சேர்ந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.