விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் தேதி தேர் திருவிழா, 7ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நேற்று கலை 5:30 மணியளவில் விருத்தாம்பிகை, விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.