Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் ... ஆடி வெள்ளி; கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு பூஜை ஆடி வெள்ளி; கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
11:08

சாத்துார்; சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று காலை 10:00 மணிக்கு ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோயிலில் தை மற்றும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம் வருகிறஆகஸ்ட்16ல் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறஉள்ளது. இதற்காக திருவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. காசிவிஸ்வநாதபட்டர் தலைமையில் பட்டர்கள் கோயில் கொடி மரத்தில் திருவிழா கொடியை ஏற்றினர். பின்னர் சிறப்பு பூஜைகளுடன் தீபா ராதனை நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ், பரம்பரை பூஜாரிகள், இருக்கன்குடி, நத்தத்துபட்டி, கே.மேட்டுப்பட்டி, அப்பனேரி, என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தமுக்கியபிரமுகர்கள் நாட்டாமைகள், ஊராட்சித் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். திருவிழா கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும். ஆகஸ்ட் 16 மதியம் ஒரு மணி அளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும் விழாவிற்கானஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாத்துாரில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar