ஆடி வெள்ளி; கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 11:08
கோவை; ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் முப்பெரும் தேவியர்களான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.