ஆடி வெள்ளி; வளையல் அலங்காரத்தில் சந்தக்கடை மாரியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 12:08
கூடலூர்; ஆடி வெள்ளியை முன்னிட்டு, மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆடி மாதம் வெள்ளி கிழமையை முன்னிட்டு, இன்று மாரியம்மன் கோவில்களில், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாரியம்மன், சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.