பதிவு செய்த நாள்
14
ஆக
2024
03:08
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி, துலுக்காணத்தம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா, கடந்த 11ம் தேதி கூழ் ஊற்றுதல் நிகழ்வோடு துவங்கியது. மறுநாள் பகுதி மக்கள் வாடை பொங்கல் வைத்தனர். நேற்று இரவு வாண வேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க அம்மன் வீதியுலா புறபட்டு சென்றார். சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், மேட்டு தெரு, தபால் தெரு, மணியகார தெரு, மண்ணடி தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும், அவரவர் வீட்டு வாசலில், கோலமிட்டு, கட்டில்களில் படையிலிட்டு, ஆடு, கோழி பலி கொடுத்து துலுக்காணத்தம்மனை வழிபட்டனர்.