பதிவு செய்த நாள்
16
ஆக
2024
10:08
திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், முழுமையான 108 மூலிகை பொருட்களை கொண்டு உருவான பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசியில் நடைபெறும் நவராத்திரி விழா மட்டுமின்றி, ஆடி, சித்திரை, தை மாதங்களில், வாராகி நவராத்திரி விழா நடைபெறுகிறது. இக்கோவிலில் உள்ள மூலவர் திரிபுரசுந்தரி அம்மனை, திருச்செந்துார் போன்று, ஆண் பக்தர்கள் சட்டை அணியாமல் படிக்கட்டுகளில் ஏறி சென்று வழிபாடு செய்கின்றனர். இந்தாண்டு ஆடி மாதத்தில் நடைபெறும் நவராத்திரி விழா, கடந்த 4 – 14 ம் தேதி வரை நடந்தது. தினசரி அம்மனுக்கு பிரார்த்தனை வழிபாடு, நெய்வேத்தியம், அர்ச்சனை, வேதபாராயன முழக்கங்களோடு நடத்தப்பட்டன. தினசரி பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து, அம்மன் வழிபாட்டில் பங்கேற்றனர். இன்று ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, மாலை 5:30 மணிக்கு 108 விளக்கு பூஜை நடைபெற உள்ளது.