ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டையில்1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானை யுடன் முருக பெருமான்பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில், நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று,மூலவர் வள்ளி தெய்வா னை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு, 1,008 பால்குடஅபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் மூலவர், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். அதன்பின், அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட சேலைகள் கோவில் நிர்வாகம் சார்பில் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.