வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் தேரோட்டம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 11:08
புதுச்சேரி ; புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோவியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டின் ஆடித் தேரோட்டாம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள், இரவு பல்வேறு வாகனங்களில் சிறப்பு வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.