Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி துர்க்கை அம்மன் கோயிலில் ... ஆடி வெள்ளி; கூடலூர் மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை ஆடி வெள்ளி; கூடலூர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு சப்பர வீதியுலா
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு சப்பர வீதியுலா

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
12:08

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு சப்பர வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை இழுத்து வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற உள்ளது.


சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது ஆனந்தவல்லி அம்மன் சிம்மம்,அன்னம்,கமலம்,குதிரை, யானை, பூப்பல்லக்கு,கிளி,விருஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வீதியுலா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 7 ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்பர வீதியுலாவிற்காக கோயில் முன்பாக அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த சப்பரத்தில் மாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் இதனைத் தொடர்ந்து சன்னதி புதுக்குளம், மானாமதுரை கஸ்பா கிராமத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் தேங்காய்களை சப்பரத்திற்கு முன்பாக சிதறுகாய் உடைத்து விட்டு சப்பரத்தை 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர்.சப்பரம் நிலையை அடைந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது.இன்று கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் ஆடித்தபசு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar