இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி விழா; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 04:08
சாத்துார்; சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதம் கடைசி வெள்ளி பெருந்திருவிழா வில் அம்மனவீதி உலா வரும் நிகழ்ச்சி இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்தது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை, பங்குனி மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் கடைசி வெள்ளி பெருந்திருவிழா இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ உற்சவமாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவஅம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மன் ரிஷபவாகனத்தில் வீற்றிருக்க மதியம் 2 : 45மணிக்கு அம்மன் சென்டா, மேளம் , முழங்க வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மன் மண்டகப்படியார்கள் அமைத்திருந்த திருக் கண்ணில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் அர்ச்சுனா நதியில் எழுந்தருளியமாரியம்மன் கோயிலை சென்றடைந்தார். திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் பாதயாத்திரையாகவும் வேன் லாரி பஸ்களில் கோயிலுக்கு வந்திருந்தனர். ஆயிரக்கணக்கானபக்தர்கள் பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும், அக்னி சட்டி ஆயிரம் கண் பானை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.