திண்டிவனம் ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 04:08
திண்டிவனம்; திண்டிவனம் ராஜாம்பேட்டை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ அம்பாள் அர்த்தநாரீஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்து காட்சியளித்தார். தொடர்ந்து மகாதீபாரதனை நடந்தது. இதில் ராம்டெக்ஸ் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தலைவர் அன்னை சந்தானம் மற்றும் நிர்வாகிகள் மதிவாணன், ரவிசந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.