காஞ்சிபுரம் ; மாங்காடு, அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று 15ம் தேதி 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அதனைத்தொடர்ந்து பொதுவிருந்து சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இத்திருக்கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி.ஆர்.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் துணை ஆணையர் / செயல்அலுவலர் கே.சித்ராதேவி, மாங்காடு, நகராட்சித்தலைவர் சுமதி முருகன், நகராட்சி துணைத்தலைவர் ஜபருல்லா, ஆன்மிக அன்பர்கள், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, திருப்பெரும்புதூர் ஆய்வர் திரு.சுரேஷ்குமார், .ரா.ராமசாமி, அயற்பணி (ஆய்வர்) மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.