திருநெல்வேலி; குறுக்குத்துறை மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்வாமிகளின் 353வது ஆராதனை மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கனகாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா மங்களாரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராகவேந்திரரை தரிசனம் செய்தனர்.